
ஆசையாய் என்னை அள்ளி அணைக்கிறாய்.......
மறுகணமே தள்ளி விடுகிறாய்......
அன்பாகப் பேசி என்னை அடிமையாக்குகிறாய்.....
வம்பாகப் பேசி என்னை அழவும் செய்கிறாய்.....
உனதாசைகளை நான் எனதாசையாய் நினைக்கும் போது
என் ஏக்கங்களுக்கு நீ செவி சாய்க்கக் கூடாதா???
கருவிழி அழகனே.....என் காதலுக்கும் கொஞ்சம் இடம் கொடுக்கக் கூடாதா???
அன்புக்காக உன்னிடம் மடியேந்தி நிற்கின்றேன்.....மனமிரங்கக் கூடாதா????
எனக்கு பூமாலையிடு என்று சொல்ல வில்லை....
வார்த்தைகளால் முள் மாலை போடாதே என்கிறேன்.....
வைரம் தேவை இல்லை....
உனது வைரம் போன்ற இதயத்தின் ஓரத்தில் இடம் ஒன்று தேவை...
தங்க நகை தேவை இல்லை....
உனது தங்க நிற உடலை கட்டியணைக்க உத்தரவு தேவை....
பணம் தேவை இல்லை...
பணத்தாலும் வெல்ல முடியாத உனது அன்பு எனக்கு தேவை.....
எதிர்ப்பார்க்கிறேன்....என்னை ஏமாற்ற மாட்டாய் என்று...... http://blog.tamilish.com/pakkam/5
No comments:
Post a Comment