Wednesday, December 7, 2011

இரவு....



நித்திரை இல்லாமல் தவிக்கிறேன் நித்தம் இரவில்...
மேகக்கூட்டங்களைக் கண்டால் நாம் மோகத்தில் தத்தளித்த ஞாபங்கள்...
நட்சத்திரங்களோ ......
என் மேனியில் நீ வைத்த இதழ் ஒத்தனங்கள்...
ஆஹா...வெண்ணிலவு ...
நமது சில்மிஷங்களின் ஒட்டு மொத்த சாட்சி...
எப்படியடா..வரும் உறக்கம்..????
உன் மேல் உள்ள கிரக்கம் தீராமல்......... http://blog.tamilish.com/pakkam/5

Tuesday, October 18, 2011

உன் வருகைக்காக........என் கண்ணிர்துளி.


தினம் இரவில் தவிக்கிறேன்...உறக்கமில்லாமல்...
உறங்கினால்..கனவிலாவது நீ வருவாயே...என்னை அணைக்க....
நாம் இணைந்தது...விதியின் சதியென்றாய்....
உடைந்தது என் நெஞ்சம்...தூள்..தூளாய்....
ஆசையாய் நெருங்கிய போது
அள்ளி அணைத்தாய்....மறுகணமே....தூக்கி எறிந்தாய்...
கவலைப்படுகிறேன்....நீ எறிந்ததற்காக அல்ல.....
உதறி தள்ளுவதற்காகக் கூட இனி என்னை தொட மாட்டாய் என்பதற்காக.....
மறந்து விடு என்றாய்....உனக்காக மறந்து விடுகிறேன்...
இல்லை..மறந்து விட்டதைப் போல நடிக்கப் போகிறேன்....
என் விழிகளின் ஓரம் கண்ணிர்துளி.. காத்துக்கிடக்கும்..
உன் வருகைக்காக......... http://blog.tamilish.com/pakkam/5

Saturday, October 8, 2011

நேசிப்பாயா.....???


உள்ளத்தால் ஏச வில்லை..உன்னை..
வெறும் உதடுகளால் மட்டுமே......
உன்னை நோகடித்த கடுஞ்சொற்கள்
என்னுடையதன்று....
கோபம் எனும் சாத்தானுடையது.......
மன்னிப்பாயா.......?????
கோபம்...கோபம் மட்டுமே....
உன் நிழலை நீ அறிவாயா..என்று தெரியவில்லை...
ஆனால்....உன் மேல் எனக்கான அன்பை..
கண்டிப்பாக அறிந்த்திருப்பாய்...எனத் தெரியும்...
என் உள்ளத்தின் அன்பு...உண்மையானது...
உன்னதமானது....மென்மையானது....ஆனால்...
உறுதியானது......
நீ இருக்கும் இடம் தேடி என் கண்கள் அலைகின்றன...
உன் குரல் கேட்கும் இடத்தைத் தேடி என் செவிகள் பயணிக்கின்றன..
ஆனால்...உன்னிடம் பேச மட்டும் என் உதடுகள் தயங்குகின்றன.....
உன் விழிகளில் நான் தென்படாத போது....
உன்னை ரகசியமாய்....மிக ரகசியமாய்........
ரசிக்கிறேன்.....உன் அன்பிற்காக யாசிக்கிறேன்.....
உன் அரவணைப்பிற்காக ஏங்குகிறேன்.....
ஒரு முறையேனும்.......மன்னித்து....
உன் திருவாய் மலர்ந்து.....
என் இரு விழி கலந்து....
நேசிப்பாயா.....?????????????????
ஒரு யாசகனைப் போல் கேட்கின்றேன்......
வார்த்தைகளால் இல்லாவிடினும்....
பார்வையிலாவது சொல்லிவிடு...
என்னை உனக்குப் பிடிக்கும் என்று........ http://blog.tamilish.com/pakkam/5

Monday, September 26, 2011


மெளனம் 1

சவக்குழியின் அழைப்பா....
அல்லது நரகத்தின் வாசலா....
கொல்லாமல் கொல்கிறதே..
அவனுடைய மெளனம்.......

மெளனம் 2

மயிலிறகாய் வருடியது...
தென்றலாய் தீண்டியது.....
மோகமாய் மலர்ந்தது.....
அவனுடைய மெளனம்...

மெளனம் 3

ஏக்கத்தை தீண்டியது...
என் மோகத்தைத் தூண்டியது...
என் தாகத்தை தணிக்குமா....
அவன் மெளனம்..... http://blog.tamilish.com/pakkam/5

Thursday, September 15, 2011

காமம்


உடலில் எல்லா பாகங்களும் சிலிர்க்கின்றன....
அவன் என்னை தொடுகையில்....
இதழ்களும் வேர்க்கின்றன
அவன் முத்தமிடுகையில்.....
காதோடு ஒரு ரகசியம் சொல்லட்டுமா.....???
உணர்ச்சிகளில் சிறந்தது ..காமம்தான்...... http://blog.tamilish.com/pakkam/5

Wednesday, September 7, 2011

விடுமுறை


ஆடி முடிந்து ஆவணியில்
புது மனைவியை எதிர்பார்க்கும்...
கணவனைப் போல்.....
வாரம் ஆறு நாளும்....
ஞாயிறுக்காக ....காத்திருப்பதும் சுகம்தான்.... http://blog.tamilish.com/pakkam/5

தேநீர் கோப்பை


மதுரசமா...இல்லை.....
தேவர்கள் அருந்தும் அமிர்தமா..????
மனைவியிடம் கேட்டான் ..
ஏழை விவசாயி ஒருவன்....
கையில் தேநீர் கோப்பையுடன்.... http://blog.tamilish.com/pakkam/5

Monday, August 22, 2011

நாய்க்கும் நன்றி உண்டு....


நாய்க்கும் நன்றி உண்டு....
மனிதா உனக்கில்லையே.......
காரியம் முடியும் வரை கை கோர்த்து நடக்கிறாய்...
எல்லாம் முடிந்த பின்..உதறி தள்ளுகிறாய்..
நன்றியை மறப்பது மனிதனுக்கு அழகல்ல...
சொல்!!!!!நீ மனிதனா????????? http://blog.tamilish.com/pakkam/5

Tuesday, July 26, 2011

வேண்டும்.........

ஏங்கினேன்...நீ வருவாய் என்று..
உன் வழிகள் தோறும் என் விழிகளைப் பதித்தேன்.
நீ வருவாய் என்று...
தினமும் இரவில் நிலவைத் தூது அனுப்பினேன்...
நீ வருவாய் என்று....
வருவாய்..வருவாய்...என எதிர்பார்த்து
என் தலையணை நனைந்தது..என் விழிகள் நனைந்தன..
உடல் உருகியது......உயிர் உறைந்தது....
ஆனால் நீ வரவே இல்லை.....
வந்தாய்....நான் எதிர்பாரா நேரத்தில்.....
தந்தாய்...எதிர்பாரா ஸ்பரிசங்கள்...
காலம் தோறும் வேண்டும் உன் செல்லக் குறும்புகள்......
வாழ்க்கைத் தோறும் வேண்டும் உன் அன்பு தொல்லைகள்....... http://blog.tamilish.com/pakkam/5

Sunday, February 6, 2011

அழைப்பு ......

காலையில் ஒலித்த அலார ஓசையில் திடுக்கிட்டு எழுந்தான் கவிவர்மன். அவசர அவசரமாக தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டான். அவன் தினமும் பாரிட் புந்தாரிலிருந்து பினாங்கிற்கு வேலைக்குச் செல்ல வேண்டும். தான் நிம்மதியாக இருக்கும் இடம் தனது மகிழுந்து ஒன்றுதான் என் நினைப்பவன். அவன் வீட்டை விட்டு வெளியேறிய முப்பாதவது நிமிடத்தில் அவனது கைத்தொலைபேசி ஒலித்தது. எடுத்து பார்த்தான். தமிழழகி எனும் பெயர் தென்பட்டது. உடனே அவன் முகம் வாடினான்.

தமிழழகி கவிவர்மனின் மனைவி. பெற்றோர்களின் வற்புறுத்தலால்தான் கவிவர்மன் அவளை மணந்து கொண்டானே தவிர உண்மையான அன்பினால் அல்ல. அவள் பெயரைப் பார்த்தவுடன் " இப்பதான் வீட்டுல இருந்து கிளம்பினேன். அதுக்குள்ளே இதுக்கு என்ன வந்துச்சோ" என சளித்துக் கொண்டான். அவள் அழைப்பைப் பொருட்படுத்தாமல் தொடர்பைத் துண்டித்தான். "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்று மின்னல் FM ல் ஒலித்தப் பாடலை தானும் முனுமுனுத்துக் கொண்டே சென்றான்.

பினாங்கு பாலத்தை நெருங்கியவுடன் வாகன நெரிசல் ஆரம்பமானது. வாகனங்கள் ஒவ்வொன்றும் ஒன்றன் பின் ஒன்றாக ஆமையை விட மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. கவிவர்மன் தன் கைகடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் அரை மணி நேரத்தில அவனது அலுவலக நேரம் ஆரம்பமாகி விடும். " மணி வேற ஆகுது. இவனுங்க வேற இப்படி பண்ணறானுங்க " என கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டான். அந்நேரத்தில் மறுபடியும் கைத்தொலைபேசியில் அழைப்பு வந்தது. எடுத்துப் பார்த்தான். அவன் கோபம் அதிகரித்தது. மீண்டும் தமிழழகி. அழைப்பைத் துண்டித்து விட்டு ஒருவழியாக தனது அலுவலகத்தை வந்தடைந்தான்.

நேரமாகி விட்டதே எனும் பதற்றத்தோடு சென்ற கவிவர்மனுக்கு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அனைவரும் அவனுக்குப் பூச்செண்டுகள், பூமாலைகள், வாழ்த்துகள் என மாறி மாறி அளித்தனர். கவிவர்மன் செய்வதறியாது விழித்தான். " டேய், கதிர் என்னடா நடக்குது இங்க.ஏன் எல்லாரும் எனக்கு வாழ்த்து சொல்றாங்க?" எனக் கேட்டான். " அதுவா, இன்னும் கொஞ்சம் நேரத்துல தெரியும் பாரு " என்று கதிர் சொல்லி முடிப்பதுற்கள் மைதிலி அங்கு வந்து " கவி.. உன்னை போஸ் கூப்டறாரு" என்றாள். கவிவர்மனோ தன் மனதில் பல வினாக்களை முனுமுனுத்துக் கொண்டே போனான்.

"மேய் ஐ கமிங் சார் " எனக் கவிவர்மன் கதவின் ஓரம் நின்றுக் கேட்டான். " யெஸ் மைய் டியர் போய் " என போஸ் திரு மணியம் சொன்னார். உள்ளே சென்றவுடன் தனக்கு பதவி உயர்வு கிடைத்திருப்பதை அறிந்து கொண்டான். சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழழகியிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. " சந்தோஷமா இருந்தா இதுக்கு ஆகாதே" என மனதுக்குள்ளே கடிந்து கொண்டான். அழைப்பைத் துண்டித்து தன் கைதொலைபேசியை முடக்கி வைத்தான். மீண்டும் திரு மணியத்திடம் தனது உரையாடலைத் தொடர்ந்தான். அவர் ஓர் உறையில் பதவி உயர்வுக்கான கடிதத்தைக் கொடுத்து வாழ்த்து சொன்னார். அந்த உறையில் கடிதம் மட்டுமல்ல ஒரு சாவியும் இருந்தது. ஆம். அலுவலகம் அவனுக்கு கொடுக்கும் புதிய மகிழுந்தின் சாவிதான் அது. கவிவர்மன் போஸ்க்கு நன்றிக் கூறி ஆவலுடன் வெளியே சென்றுப் பார்த்தான். அவனுக்காகவே "சுவிவ்ட் சூசுக்கி" நின்றுக் கொண்டிருந்தது. அளவிலா ஆனந்தம் அடைந்தான். வாழ்க்கையிலேயே இன்றைய நாள்தான் இன்பமான நாள் எனக் கருதினான்.

தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு புதிய மகிழுந்தில் ஊர்வலம் வந்தான். வாழ்வே சொர்கமாகத் தெரிந்தது அவனுக்கு. " டேய், புது கார் கிடச்சிருக்கு எங்களுக்கு ஏதும் இல்லையாட" எனக் கதிர் கேலியாக கேட்டான். "அதுக்கென்னடா அப்புறம் எந்திரன் படம் பார்க்க போலாம்டா. பிறகு சாப்பிட போலாம். எல்லா செலவும் நான் செய்யரேண்டா" எனக் கவிசர்மன் பூரிப்புடன் சொன்னான். பிறகு ஔவலாக தொலைபேசியின் மூலம் அனைவருக்கும் இவ்விஷயத்தை தெரிவித்தான். மாலை மணி 5 ஆனதும் அலுவலகத்தை விட்டு புறப்பட்டனர். கவிவர்மனும் கதிரும் தேநீர் அருந்த அருகில் இருக்கும் நாசி கண்டார் கடைக்குச் சென்றனர். மற்ற நண்பர்கள் வீட்டுக்குச் சென்று உடை மாற்றி விட்டு வருவதாகக் கூறி சென்றனர். அப்போது "எப்படா நீ அப்பா ஆகப் போற" எனக் கதிர் கவிவர்மனைக் கேட்டான். "இன்னும் ரெண்டு வாரம் இருக்குடா. எப்படா அந்த நாள் வரும்னு இருக்கு. ரொம்ப ஆசையா இருக்கேண்டா. அந்த முட்டாள கல்யாணம் செஞ்சதுக்கு இது ஒன்னுதான் புரோஜனம் " என்று கவிவர்மன் தனது உள்மனது வார்த்தைகளை வெளியிட்டான். அப்போது கதிரின் தொலைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. தமிழழகிதான் அவனுக்கும் அழைப்புக் கொடுத்தவள். " உன் வீட்டிலிருந்துதாண்டா. பேசவா வேணாமா" என்று கதிர் கவ்விவர்மனைப் பார்த்துக் கேட்டான். "அது உன்னையும் தொந்தரவு பண்ணுதா. பேசாமல் உன் தொலைபேசியை முடக்கி வை" என்று சற்று உரத்தக் குரலில் கூறினான் கவிவர்மன்.

சிலநிமிடங்கள் கழித்து, மற்ற நண்பர்கள் வந்தவுடன் மகிழுந்து திரையரங்கை நோக்கிப் பறந்தது. படம் ஆரம்பித்தது." எத்தனை பேர் வந்தாலும் நம்ம சூப்பர் ஸ்டார கவுக்க முடியாதுடா" எனக் கவிவர்மன் தன் நண்பர்களிடம் பெருமிதத்தோடு கூறினான். படத்தின் ஓட்டத்தில் அனைவரும் மூழ்கினர். படம் முடிந்தது. அனைவரும் சிற்றுண்டிக்காக தாஜ் உணவகத்திற்குச் சென்றனர். அலுவலகத்தில் நடக்கும் கேளிக்கையான நிகழ்வுகள் படத்தில் இருந்த சிறந்த காட்சிகள் எனப் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டே உண்டனர். கதிர் சொன்ன நகைசுவைகளை கேட்டு நண்பர்கள் சிலர் கண்களில் தண்ணீரே வந்து விட்டது.

மணி நள்ளிரவு 3 ஆனது. அனைவரும் விடைப்பெற்றுக் கொண்டு அவரவர் வீட்டுக்குச் சென்றனர். கவிவர்மனும் தனது வீட்டை நோக்கி விரைந்தான். தனது கைத்தொலைப்பேசி முடக்கி வைத்திருப்பது அப்போதுதுதான் அவனுக்கு நினைவிற்கு வந்தது. உடனே அதை எடுத்து திறந்தான். திறந்தவுடனேயே தவறிய அழைப்புகள் எனும் குறுஞ்செய்தி வந்தது. சற்றே அதிர்ந்தான். தமிழழகியிடமிருந்து 53 அழைப்புகள். பதற்றமடைந்தான். மகிழுந்தை வேகமாக செலுத்தினான். வழியில் ஒரு சாலை விபத்து வேறு அவனை தாமதப்படுத்தியது. வீட்டை வந்தடைய காலை மணி 4.30 ஆகி விட்டது.

வீட்டின் முன் சென்று ஹோன் அடித்தான். தமிழழகி வரவில்லை. மகிழுந்துவிலிருந்து இறங்கினான். பல நாட்கள் கழித்து தன் மனைவியின் பெயரை உச்சரித்தான்." தமிழழகி....தமிழழகி....." என அழைத்தான். அவள் வரவே இல்லை. தன் மகிழுந்தில் இருக்கும் மாற்று சாவியை எடுத்தான். வீட்டை திறந்து அவசர அவசரமாக உள்ளே சென்றான். மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது. தொலைக்காட்சி திறந்தப்படியாகவே இருந்தது. அவன் நேரே தன் அறைக்குச் சென்றான். அங்கே..அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்தான்; பயந்தான்; நடுங்கினான்; அவன் உடல் வியர்வையால் நனைந்தது; அழுதான்; கதறினான். செய்வதறியாது தடுமாறினான். தான் செய்த தவற்றை எண்ணி மனம் குமுறினான். தரையில் சாய்ந்தான். தமிழழகியிடமிருந்து வந்த அழைப்பை உதாசினம் படுத்தாமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காதே எனப் புலம்பினான். எந்த நாள் வாழ்விலே இன்பமான நாளாக கருதினானோ அந்த நாளே அவன் வாழ்க்கையின் கருப்பு அத்தியாயமாகி விட்டது.

நிமிர்ந்து பார்த்தான்,கையில் தொலைபேசியுடன் இரத்த வெள்ளத்தில் தமிழழகி. அவள் காலடியில் இன்னும் இப்பூவுலகைக் கண் திறந்து பார்க்காத சிசுவின் பிணம். அன்று கண்ணிர் விட ஆரம்பித்தவன் நிறுத்தவே இல்லை. இன்னும் அழுதுக் கொண்டிருக்கிறான் அவர்களின்
கல்லறையின் பக்கத்தில்.

**கவிவர்மன்** http://blog.tamilish.com/pakkam/5