நரகமதில் நீயும் வாழ்ந்தால்.. மிருகம் என மாற வேண்டும்... பலி கொடுத்து..பயமுறுத்து.. வெட்ட வெட்ட தலை நிமிர்த்து... முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால்..மீண்டும் அடி... மறுபடியும் மரண அடி...(பில்லா II)
Wednesday, October 9, 2013
படித்ததில் பிடித்தது - பா.விஜய்
"ஆடை துறந்து அணுகும் வரையில்..
அவளும் அழகு..இவளும் அழகு..எவளும் அழகு..
ஆடை கலைந்து ஆசை கலைந்தால்..
அவளும் ஒன்று..இவளும் ஒன்று !!
அடடா..வருமே ஞானம் அன்று........"
http://blog.tamilish.com/pakkam/5
Thursday, September 19, 2013
Monday, September 9, 2013
Thursday, September 5, 2013
Tuesday, September 3, 2013
ரணமாய் வலிக்கிறது....
என்னை நீ...
நெருங்கி வந்தால்
பூக்கள் பூக்கும் அதே மனதில்
என்னை விட்டு
விலகிச் சென்றால்..
தேள் வந்து கொட்டுகிறதே..
பூ பூக்கும் சுகத்தை விட...
தேள் கொட்டும் வலி.. அதிகம்..
ஆதலால்...என்னவனே..
என்னை நெருங்கி வராதே...
அன்று..உன்னை உதறி தள்ளிய என் உள்ளம்..
இன்னமும் ரணமாய் வலிக்கிறது....
http://blog.tamilish.com/pakkam/5
Saturday, August 31, 2013
Thursday, August 29, 2013
Wednesday, August 28, 2013
Sunday, August 18, 2013
தவமிருக்கிறேன்...
ஏங்குகிறேன்...உன் குரலைக் கேட்பதற்கு..
ஆயிரம் குரல்கள் என்னிடம் பேசினாலும்..
அனைத்தையும் தவிர்க்கிறேன்...
உன் குரலை மட்டும் கேட்க..
தவமாய் தவமிருக்கிறேன்...
நீ பேசும் நேரத்தை எதிர்பார்த்து...
தவிக்கிறேன்...
உன் குரல் எனக்கு...
மெல்லிசை....இதமான தென்றல்...
மனதை வருடும் இன்னிசை...
காத்திருக்கிறேன்...உன் அழைப்புக்காக...
விரைவாக தொடர்புக் கொள்...
ஏங்க வைக்காதே என் மெல்லிய இதயத்தை......
http://blog.tamilish.com/pakkam/5
Monday, April 29, 2013
Thursday, April 25, 2013
இவ்வளவுதான்..நீயா???
இவ்வளவுதான்..நீயா???
அதிர்ச்சியுற்றேன்..நீ யாரென்று தெரிந்த போது..
உள்ளிழுத்த மூச்சும் கூட திணறியது வெளியே வர முடியாமல்..
நின்றது என் இருதயம் துடிக்காமல்....
இரத்தம் கூட உறைந்து போனது...
கண்கள் இருண்டன.. கால்கள் நடுங்கின..
பூமி கூட திசை மாறி சுழன்றது...
அதிர்ச்சியுற்றேன் நீ யாரென்று தெரிந்த போது...
கொலைக்குற்றவாளிக்கு தூக்குத்தண்டனையாம்...
உனக்கும் கொடுக்கலாம் தூக்குத்தண்டனை...
நட்பைக் கொன்றதற்காக.....
விழிகளின் ஓரம் ஈரம்...உன்னை நினைக்கையில்..
ச்ச்சீ...இவ்வளவுதான் நீயா....???
http://blog.tamilish.com/pakkam/5
Saturday, March 9, 2013
Tuesday, February 26, 2013
கேட்பேன் கொடுப்பாயா???
சிரிக்க நினைக்கிறேன் உதடுகளைக் கொடு..
அழுக நினைக்கிறேன் இமை விளிம்பு கொடு..
நதியாய் பரவ நினைக்கிறேன் உன் மேடு பள்ளம் கொடு..
சிற்பமாக நினைக்கிறேன் செதுக்கல் கொடு...
பித்தனாக நினைக்கிறேன் சிமிட்டல் கொடு..
சித்தனாக நினைக்கிறேன் ஒரு முத்தம் கொடு..
காமனாக நினைக்கிறேன் கிறக்கம் கொடு..
மரணமாக நினைக்கிறேன் உன்னை மறத்தல் கொடு..
http://blog.tamilish.com/pakkam/5
Monday, January 14, 2013
நன்றியினைக் கொன்றோர் வாழ்வு
ஓய்வாய் இருந்தேன்....
சற்றே சங்கத்தமிழைப் புரட்டினேன்....
அடடா...எத்தனை உணர்ச்சியான வரிகள்..
படித்தேன்....சில மனிதர்களை நினைத்தேன்....
"பசுவின் காம்பை அறுத்திடும் பாவிகட்கும்
பாவையின் கருவை மிதித்துச் சிதைத்தோர்க்கும்
பாசமிகு பெற்றோரை வதைத்தோர்க்கும் மன்னிப்பு உண்டெனினும்
பார்முழுதும் தலைக்கீழாய் திசைமாறிக் கவிழ்ந்தாலும்
பாதகராம் நன்றியினைக் கொன்றோர் வாழ்வு
பாழ்பட்டே நாசமாகும்".....
http://blog.tamilish.com/pakkam/5
Subscribe to:
Posts (Atom)