Tuesday, February 26, 2013

கேட்பேன் கொடுப்பாயா???

சிரிக்க நினைக்கிறேன் உதடுகளைக் கொடு.. அழுக நினைக்கிறேன் இமை விளிம்பு கொடு.. நதியாய் பரவ நினைக்கிறேன் உன் மேடு பள்ளம் கொடு.. சிற்பமாக நினைக்கிறேன் செதுக்கல் கொடு... பித்தனாக நினைக்கிறேன் சிமிட்டல் கொடு.. சித்தனாக நினைக்கிறேன் ஒரு முத்தம் கொடு.. காமனாக நினைக்கிறேன் கிறக்கம் கொடு.. மரணமாக நினைக்கிறேன் உன்னை மறத்தல் கொடு.. http://blog.tamilish.com/pakkam/5