நரகமதில் நீயும் வாழ்ந்தால்.. மிருகம் என மாற வேண்டும்... பலி கொடுத்து..பயமுறுத்து.. வெட்ட வெட்ட தலை நிமிர்த்து... முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால்..மீண்டும் அடி... மறுபடியும் மரண அடி...(பில்லா II)
Thursday, August 30, 2012
தவிர்க்கிறேன்....தனிமையாய் இருப்பதை....
தவிர்க்கிறேன்....தனிமையாய் இருப்பதை....
தொந்தரவு செய்கிறேன்..தோழிகளை என்னுடன் பேச சொல்லி...
தொடர்பு இல்லாத நண்பர்களைக்கூட அழைக்கிறேன்...தொலைபேசியில்...
வன்முறையானப் படங்களைப் பார்க்கிறேன்...
நகைச்சுவை துணுக்குகளைத் தேடி அலைகிறேன்...
காதல் காட்சிகளை மட்டும் வேண்டாமென மறுக்கிறேன்...
காதல் பிடிக்கவில்லை என்பதற்காக அல்ல...
உன் ஞாபகம் என்னுள் வரக்கூடாது என்பதற்காக....
உன் நிழல் படும் இடத்திற்குக்கூட வர தயங்குகிறேன்....
உன் சுவடு என்னை பாதிக்குமோ என்று....
எண்ண அலைகள்....
எனக்குள் தேங்கி வழியும்..
உன் நினைவலைகள்.....
அனுதினமும்.....மோதி மோதி காயம் செய்கிறது...மனதை....
அதனால்தான் ..தவிர்க்கிறேன்....தனிமையாய் இருப்பதை.....
http://blog.tamilish.com/pakkam/5
Tuesday, August 28, 2012
நீயோ..கடவுளாகிவிட்டாய்
சந்தர்ப்பவாதி மனிதன்...
சந்தர்ப்பவாதிதான் மனிதன்...
சந்தர்ப்பவாதியாக இருந்தால்தான் அவன் மனிதன்..
இல்லையென்றால்..அவன் கடவுள்...
நான் மனிதன்....
நீயோ..கடவுளாகிவிட்டாய் என் முன்....
என் கடவுளே...உன்னை யாசிக்கிறேன்....
அதற்குமேல் உன்னை நேசிக்கிறேன்....
ஆசிர்வதி..கேட்ட வரங்களைப்
பரிசாய்..கொடுத்து
http://blog.tamilish.com/pakkam/5
பாவியாய் மாறினேன்.....
ஒரு மணி நேரமாவது..ஒரு நிமிடமாவது....
என்னுடன் பேசிவிடு....ஒரு நாளில்....
யாராக இருந்தாலும் ..என்னை அள்ளி அணைத்தாலும்....
கொஞ்சி மகிழ்ந்தாலும்....
தாயைத் தேடி..அழையும்..குழந்தைப் போல்..
உன்னை தேடி அழைகிறேன்....
தள்ளி நிற்கவும் முடியாமல்....
விட்டுக்கொடுக்கவும் முடியாமல்....
உன்னை சேர்ந்து வாழவும் முடியாமல்...
தினம்...தினம்.....சாகிறேன்....
ஆதலால்தான் சொல்கிறேன்....
ஒரு மணி நேரமாவது..ஒரு நிமிடமாவது....
என்னுடன் பேசிவிடு....ஒரு நாளில்....
உன்னை எண்ணியெண்ணி....ஆவியாய் அழைகிறேன்...
பாவியாய் மாறினேன்.....
முழுதாய்..அறிவிழக்கும் முன்....
ஒரு மணி நேரமாவது..ஒரு நிமிடமாவது....
என்னுடன் பேசிவிடு....ஒரு நாளில்...
அன்பாக கேட்கிறேன்...மறுக்காதே...
பேசிவிடு...நான் முழுவதும் கிறுக்காய்
மாறும் முன்...
http://blog.tamilish.com/pakkam/5
Friday, August 17, 2012
என் நினைவுகளிலிருந்து....
தேடி அலைகிறேன்...உன் முகம் இருக்கும்
புகைப்படங்களை......
நேரில்தான்..உன் முகம் காட்ட மறுக்கிறாயே.....
என் கண்ணீர்தான்...உனக்கு இன்பம் தரும் என்றால்...
சொல்......
தினம் தினம் அழுவேன்......நீ சிரிக்க....
கண்ணை மூடினால்...கனவில் வருவாயென்று....
உறங்காமலே...இருக்கிறேன்....
நினைவிலும் கொல்கிறாயே....
இதழ்கள் சேர்ந்த நேரம்....நம் இதயம் கலந்த நேரம்...
உடல்கள் இணைந்த நேரம்...நம் உயிர்கள் உறைந்த நேரம்....
என் மார்பில் நீ கண் அசந்த நேரம்....
உன் தோளில் நான் தலை சாய்த்த நேரம்.....
அழியாமல் கொல்கிறது..என் நினைவுகளிலிருந்து....
இடியைத் தாங்கும் பாறையிடம் வரம் கேட்கிறேன்
உன் உறுதி என் மனதுக்கு வேண்டுமென.....
http://blog.tamilish.com/pakkam/5
Wednesday, August 15, 2012
மறக்க மாட்டேன்.....
முள்ளு மேல் படுக்கனுமா ??
நெருப்பு மேல் நடக்கனுமா ??
ஆழ் கடலில் மூழ்கனுமா ??
எரிமலை உள்ள....போகனுமா ??
நஞ்சு தின்னனுமா ??
இல்லை....உயிரை விட்டொழிக்கனுமா ??
சொல்லு....
கால் தூசிக்கு சமம்...
ம்ம்ம்..என்று சொன்னா போதும்....
ஒரு நொடியில் செஞ்சிடுவேன்.....
ஆனால்...சொன்னாயே..ஒரு வார்த்தை...
நீ சொன்ன வார்த்தையிலே....
ஊசலாடுது...மனசு....
நீ காட்டுன வெறுப்பினிலே....
விட்டு பிரியுது...உசுரு..
நீ சொன்னது சொல் இல்ல....
என் ஆவிய திருட வந்த வில்லு....
ஏழு ஜென்மம் இருப்பது உண்மையினா.....
அப்பவும்...நெனச்சிருப்பேன்..உன்னை....
மறக்க சொல்லி கெஞ்சாத...
வேணும்னா....என்னை அணைக்க சொல்லி கொஞ்சு...
http://blog.tamilish.com/pakkam/5
Tuesday, August 14, 2012
கவிதையல்ல...கதை சொல்கிறேன்.....கேளுங்கள்...
ஒரு பூவின் கதை...
பூவின் காதல் கதை......
அனாதை..பூ அது....ஆதரவில்லா..பூ அது...
துணைத்தேடி..ஏங்கியது....
வண்டொன்று வந்தது...
காதல் கொண்டது......
காதல் வசனங்கள் பேசியது....
பூவின் நிலையறிந்து...துணையாய் இருப்பது போல்
நடித்தது....
கொஞ்சம் கொஞ்சமாய்....தேனை உறிஞ்சியது....
தேனும் தீர்ந்தது....
வண்டோ வேறு பூவை நோக்கிப் பறந்தது....
பாவம்.....பூ..மீண்டும் அனாதையானது....
பூவிற்குத் தெரியவில்லை....
வண்டு தேனுக்காகக் காதல் கொண்டது.....
வண்டை எண்ணி..பூ தினம் தினம் அழுதது..
வண்டு அதே காதல் லீலைகளை புதிய பூவிடம் ....
காட்டிக் கொண்டிருந்தது....
இப்பொழுதும்...அனாதை பூ அழுகிறது...
இறைவனிடம்...மன்றாடுகிறது.....
வண்டுகளே இல்லா உலகம் வேண்டுமென்று.....
http://blog.tamilish.com/pakkam/5
Monday, August 6, 2012
சிபாரிசு செய்கிறேன்......உங்களுக்காக...
நல்லவர்களாய் நடிக்கும் நரிகளோடு சேர்ந்தால்...
நல்லவர் கூட நரியாய் தெரிவர்..நல்லவருக்கு...
குழிப் பறிக்கும் கயவர்கள் உடன் இருக்க....
கள்ளமற்றவரை கயவராய் நீ நினைக்க....
பொய்யான நட்பு உன்னை..ஆட்கொள்ள...
மெய்யான என் உறவை நீ உதறி தள்ள..
தீயில்லாமலே...எரிந்தது இதயம்....
நீரில்லாமலே..கறைந்தது....உயிர்...
உலகமகா நடிகர்களே.....
மானம் இல்லா மடையர்களே....
நயவஞ்சகத்தில்....சிறந்தவர்களே......
அடுத்த வீட்டில்..தீப்பிடித்தால்...
நெஞ்சம் குளிரும்...நல்லவர்களே.....
பக்கத்து வீட்டு ஜன்னலை..
எட்டிப் பார்க்கும் திறமைமிக்கவர்களே....
வருத்தம் வேண்டாம்...
சிபாரிசு செய்கிறேன்......உங்களுக்காக...
நோபல் பரிசு....வழங்கச்சொல்லி...
http://blog.tamilish.com/pakkam/5
Friday, August 3, 2012
மரணம்...இல்லா.மரணமே....
உனக்கு மரணம் இல்லையென்ற ஆணவமா.....
பிள்ளையின் அழுக்குரல்...உனக்கு இன்னிசையா???
மனைவின் கண்ணீர்...உனக்கு அமிர்தமா ????
தந்தையின் துக்கம்....உனக்கு ...ஆனந்த தாண்டவமா??
ஊராரின் கவலை..உனக்கு பொங்கல் திருநாளா???
இத்தனைப் பேரின் அழுகைக்கூட உனக்கு...
மரணத்தை தரவில்லை எனும்...தலைக்கணமா????
மரணம்...இல்லா.மரணமே....
கடுகளவேனும்....இரக்கம்காட்டு.....
உயிர்களுக்கு..உயிர் பிச்சைக்கொடு....
தாயைப் பிரியப் போகும் குழந்தைக்கும்....
கணவனைப் இழக்கப்போகும் மனைவிக்கும்.....
மகனை உனக்கு தாரைவார்த்துக் கொடுக்கப் போகும்....அன்னைக்கும்....
கடுகளவேனும்..இரக்கம்காட்டு.....
உனக்கு கட்டளையிடவில்லை......மரணமே....
உன் காலடியில் மண்டியிடுகிறேன்......
மனமிறங்குவாயா...இந்த அபலைக்கு....
http://blog.tamilish.com/pakkam/5
Wednesday, August 1, 2012
சுகமான நினைவுகள் அது....
உனது...மின்னஞ்சலுக்காக ஏங்கும் வேளையில்...
பழைய மின்னஞ்சலை.சற்றே கிளரி பார்த்தேன்....
நமது...உறவின் ஆழம் தெரிந்தது....
சுகமான நினைவுகள் அது...
இன்று சுமையாக மாறியது.உனக்கு..
அன்று அன்பான உன் வார்த்தைகள் இன்று அனலாகத் தெறிக்கிறதே
உன் காதல் பார்வை..இன்று காலியாக...இருக்கிறதே......
ஏங்குகிறேன்....உன் வருகைக்காக..
நேரில் ..இல்லாவிடினும்...
கனவிலாவது....தரிசனம்..தந்துவிடு.......
http://blog.tamilish.com/pakkam/5
Subscribe to:
Posts (Atom)