Thursday, February 23, 2012

நட்பு.......


மூன்றெழுத்து மந்திரம்...அது முடிவில்லா சமுத்திரம்...
ஒரே கருவறையில் இருக்க வில்லை..நீயும் நானும்..
ஆனால்,
அவரவர் இதய அறையில் இருக்கிறோமே ..
இது என்ன அதிசயம்...
என்னவன் பார்த்த முதல் பார்வைக் கூட
மறந்து போனதே...
என் உயிரே..உனது பார்வை என் இதயத்தில் இனிக்கிறதே....
நட்பின் தாய்மொழியே.....
கல்லறை சேர்ந்தாலும்...உயர்ந்து கொண்டே போகும்..
தமிழ்மொழிப் போல்...நமது நட்பு....... http://blog.tamilish.com/pakkam/5

Wednesday, February 22, 2012

தரிசனம் தருவயா ???


அறியாத வயதில்...புரியாத உணர்வுகள்...
தெரியாத மனதில்...தெளியாத கனவுகள்...
கனவுகள் கனவாகவே போகுமோ???
இல்லை..உன்னோடு கலந்து ...
நினைவாகிப் போகுமோ???
தரிசனம் தருவாயா..இல்லை
தடம் இல்லாமல் மறைவாயா..???? http://blog.tamilish.com/pakkam/5

Monday, February 20, 2012

காதல் எனப் பெயர் சூட்டவா....


என்னவனே..உனது மாயப் பார்வையின் அர்த்தம் என்ன....???
இருவிழி கொண்டு என் இதயத்தை அபக்கறிக்கிறாயே....
உனது கண்களுக்குக் கள்வன் எனப் பெயர் சூட்டவா.....
இரு கரங்களைக் கொண்டு என்னை ஆட்பறிக்கிறாயே...
உன் கைகளுக்கு அரக்கன் எனப் பெயர் சூட்டவா....
உயிரோடு என்னை உன் அரவணைப்பில் புதைக்கிறாயே...
உன் அன்பிற்குக் காதல் எனப் பெயர் சூட்டவா.....
உன் அரவணைப்பில்...திணருகிறேன்...
உன் அன்பில்...திகைக்கிறேன்...
உன் காதலுக்காக...தவிக்கிறேன்.... http://blog.tamilish.com/pakkam/5

Sunday, February 19, 2012

என் நண்பனே......


உள்ளம் உருக பழகினேன்...உயிர் உருக பழகினேன்...
அவன் காலில் முள் குத்தினால்..என் கண்ணில் நீர் வழிந்ததே...
ஆனால்...என் நெஞ்சில் முள் தைத்து ...
காணாமல் போனானே....
வார்த்தைகளால் அல்ல....வெறும் உதடுகளால் அல்ல...
உள்ளத்தால் பழகினேன்..உயிரால் பழகினேன்....
கல்லால் அடித்தாலும் தாங்கியிருப்பேன்...நண்பனே...
சொல்லால் அடித்தாயே.....
வானத்தின் நிறம் கருப்பு என்றும்....
காகத்தின் நிறம் வெள்ளை என்றும்....
நீ சொன்னால் நம்பினேனே....
உன் இதயத்தின் நிறந்த்தை மட்டும் நான் அறிய தவறினேனே.....
உறவில் நம்பிக்கையில்லாமல்..உன் நட்பில் நம்பிக்கை வைத்தேனே.....
என் மேல் தீயெறிந்து சென்றதேனோ....
என் நண்பனே...... http://blog.tamilish.com/pakkam/5

Thursday, February 16, 2012

என்னை ஆள்பவன்....


கண்விழித்துப் பார்த்தேன்...
கண்முன்னே ஆதவன்..
கண்ணயர்ந்தாலோ...கனவில் என்னை ஆள்பவன்..
ஆதவன் மறையலாம்...
என்னை ஆள்பவன் மறையான்....
உலகம் இருளில் ..ஆதவன் மறைந்தால்..
நானும் இருளில் ..என்னை ஆள்பவன்....
என்னை மறந்தால்....... http://blog.tamilish.com/pakkam/5