Tuesday, October 18, 2011

உன் வருகைக்காக........என் கண்ணிர்துளி.


தினம் இரவில் தவிக்கிறேன்...உறக்கமில்லாமல்...
உறங்கினால்..கனவிலாவது நீ வருவாயே...என்னை அணைக்க....
நாம் இணைந்தது...விதியின் சதியென்றாய்....
உடைந்தது என் நெஞ்சம்...தூள்..தூளாய்....
ஆசையாய் நெருங்கிய போது
அள்ளி அணைத்தாய்....மறுகணமே....தூக்கி எறிந்தாய்...
கவலைப்படுகிறேன்....நீ எறிந்ததற்காக அல்ல.....
உதறி தள்ளுவதற்காகக் கூட இனி என்னை தொட மாட்டாய் என்பதற்காக.....
மறந்து விடு என்றாய்....உனக்காக மறந்து விடுகிறேன்...
இல்லை..மறந்து விட்டதைப் போல நடிக்கப் போகிறேன்....
என் விழிகளின் ஓரம் கண்ணிர்துளி.. காத்துக்கிடக்கும்..
உன் வருகைக்காக......... http://blog.tamilish.com/pakkam/5

Saturday, October 8, 2011

நேசிப்பாயா.....???


உள்ளத்தால் ஏச வில்லை..உன்னை..
வெறும் உதடுகளால் மட்டுமே......
உன்னை நோகடித்த கடுஞ்சொற்கள்
என்னுடையதன்று....
கோபம் எனும் சாத்தானுடையது.......
மன்னிப்பாயா.......?????
கோபம்...கோபம் மட்டுமே....
உன் நிழலை நீ அறிவாயா..என்று தெரியவில்லை...
ஆனால்....உன் மேல் எனக்கான அன்பை..
கண்டிப்பாக அறிந்த்திருப்பாய்...எனத் தெரியும்...
என் உள்ளத்தின் அன்பு...உண்மையானது...
உன்னதமானது....மென்மையானது....ஆனால்...
உறுதியானது......
நீ இருக்கும் இடம் தேடி என் கண்கள் அலைகின்றன...
உன் குரல் கேட்கும் இடத்தைத் தேடி என் செவிகள் பயணிக்கின்றன..
ஆனால்...உன்னிடம் பேச மட்டும் என் உதடுகள் தயங்குகின்றன.....
உன் விழிகளில் நான் தென்படாத போது....
உன்னை ரகசியமாய்....மிக ரகசியமாய்........
ரசிக்கிறேன்.....உன் அன்பிற்காக யாசிக்கிறேன்.....
உன் அரவணைப்பிற்காக ஏங்குகிறேன்.....
ஒரு முறையேனும்.......மன்னித்து....
உன் திருவாய் மலர்ந்து.....
என் இரு விழி கலந்து....
நேசிப்பாயா.....?????????????????
ஒரு யாசகனைப் போல் கேட்கின்றேன்......
வார்த்தைகளால் இல்லாவிடினும்....
பார்வையிலாவது சொல்லிவிடு...
என்னை உனக்குப் பிடிக்கும் என்று........ http://blog.tamilish.com/pakkam/5