Wednesday, July 14, 2010

கிறுக்கல்


நரகத்தின் வாசலில் நின்றுக் கேட்டேன்...
கொடுமையான தண்டனை எதுவென்று....
அங்கு ஒருவன்......."தனிமை" என்றான்..... http://blog.tamilish.com/pakkam/5

Friday, July 9, 2010

நட்பு....


எங்கோ பிறந்து..எங்கோ வளர்ந்த ..
இரு உயிர்கள் சேர்வதே நட்பு....
காலங்கள் மாறும் ..காலம் தந்த கனவுகள் மாறும்...
மாறாமல் இருப்பது நட்பு....
உறவுகள் தூக்கி எரியும் போது...
தோள் கொடுப்பது நட்பு....
சமுதாயம் ஒதுக்கும் போது...
அரவணைப்பது நட்பு....
சுற்றம்!!!பணம் இருக்கும் வரை....
தொப்புள் கொடி உறவு!!!!தனக்கு துணைக் கிடைக்கும் வரை....
திருமண உறவு!!!!விட்டுக்கொடுக்கும் வரை.....
நண்பன் மட்டுமே!!!!!நமது கடைசி மணித்துளிகள் வரை......
நட்பு......உரிமையானது...உண்மையானது..... http://blog.tamilish.com/pakkam/5

Wednesday, July 7, 2010

ஆசை......


பௌர்ணமி இரவில் கடற்கரையோரம்....இருவரும் கைகோர்த்து நடக்க வேண்டும்.....
ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து..கதைகள் பல பேச வேண்டும்....
மெல்லிய காற்றால் உடல் கூச....உன் மார்பில் நான் புதைய வேண்டும்.....
என் கூந்தலை நீ கோதி விட்டு....நான் உறங்க நீ பாட வேண்டும்.....
இரவு நம்மை ஆட்கொள்ள நம் இதழ்கள் போரிட வேண்டும்.....
வென்றது யாரென்று உதட்டின் காயங்கள் பதிலளிக்க வேண்டும்......
யார் இந்த காதலர்கள் என நட்சத்திரங்கள்....திகைக்க வேண்டும்......
நமது மோகத் தீயை கடல் அலைகள் வந்து அணைக்க வேண்டும்....
கடலலை அணைத்தாலும் அணையாது நமது காதல்....
தீயில் போட்டு எரித்தாலும்...தீராது எந்தன் காதல்....... http://blog.tamilish.com/pakkam/5

Sunday, July 4, 2010

எப்போது.?????


இமைகள் ரெண்டும் மூடினால் உன் முகம் தெரிகிறதே.....
என் இதய வாசலிலும் உன் கால் தடம் இருக்கிறதே.....
நீ கொடுத்த முதல் முத்தம்...இன்னும் என் இதழ்களில் இனிக்கிறதே.....
நீ பார்த்த முதல் பார்வை என் நெஞ்சுக்குள் வாழ்கிறதே.....
என்னைத் திருடிய கள்வனே.....உன் மடி சாய்வது எப்போது..?
உன் நினைவுகள் என்னை கொல்கிறதே....
இது எனக்கு மட்டும் உண்டான வலியா......
உன் நினைவுகளில் என் நிழல் தெரிகிறதா...?????
உன்னை நினைத்து உருகுது என் ஆவி.......
உன் முகம் பார்க்க ஏங்குது என் ஜீவன்......
இனிய கனவுகள் தந்து என் உறக்கத்தைக் கெடுத்தவனே.......
என் வலிகளுக்கு மருந்தாகப்போவது எப்போது.?????
வா....என் உயிர் புகுந்து எனை உறைய செய்...
உன் அன்பால் எனைக் கரைய செய்.....
கட்டியணைத்து எனைக் கலங்க செய்.....
உன் காதலுக்காக ஏங்குகிறேன்.....இதை காமம் என்று எண்ணி விட்டதே...
காமம்.....வெறும் சுகத்தை எதிர்ப்பார்ப்பது...
எனது காதல் உன் அளவிலா அன்பை எதிர்ப்பார்ப்பது.......
அறிந்து கொள்...என் மனதை புரிந்து கொள்........ http://blog.tamilish.com/pakkam/5

Thursday, July 1, 2010

மன்னிக்கவும்......


கோபத்தால் அறிவிழந்து விட்டேன்....
பலர் மனதை ரணமாக்கி விட்டேன்....
கெட்டவள் எனும் பெயர் வாங்கி விட்டேன்....
பகைவர்களையும் நான் சேர்த்துக் கொண்டேன்....

கோபம் வேண்டாம் என்று அப்பா சொல்லியும்
அமைதியாய் இரு என்று அம்மா சொல்லியும்
பேதை மனம் கேட்கவில்லை.....
இந்தப் பிஞ்சு மனம் மாறவில்லை...

அறிந்தொன்றும் நான் செய்யவில்லை
அறியாமல் செய்தேன் இந்தப் பிழை...
நல்லதை நினைத்து..கெட்டதை மறந்து....
மன்னிக்கக் கூடாதா????
மங்கையை மன்னிக்கக் கூடாதா????
பெரியவென்றும் சிறியவென்றும் பாகுப்பாடு பாராமல்
வார்த்தைகளால் சுட்டெறித்து விட்டேன்.....
எனைப் பொறுத்தருள கூடாதா??? http://blog.tamilish.com/pakkam/5