நரகமதில் நீயும் வாழ்ந்தால்.. மிருகம் என மாற வேண்டும்... பலி கொடுத்து..பயமுறுத்து.. வெட்ட வெட்ட தலை நிமிர்த்து... முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால்..மீண்டும் அடி... மறுபடியும் மரண அடி...(பில்லா II)
Monday, July 30, 2012
வெறுப்பைக் கேட்டால்..எதை தருவாய்???
அன்பைக் கேட்டேன்...
அரவணைப்பைக் கேட்டேன்...
நெஞ்சில் மஞ்சம் கேட்டேன்..
மடியில் தூக்கம் கேட்டேன்...
என் விழியில் உன் உருவம் கேட்டேன்....
உன் நாவில் என் பெயர் சொல்லக் கேட்டேன்....
இதயம் கேட்டேன்...
அதில் கொஞ்சம்...இடம் கேட்டேன்....
முத்தம் கேட்டேன்...உன்னை மொத்தமாய் கேட்டேன்...
கூடல் கேட்டேன்..அதில் கொஞ்சம் ஊடல் கேட்டேன்...
எதைக் கேட்டாலும் வெறுப்பையே
பதிலாக தருகிறாயே...
வெறுப்பைக் கேட்டால்..எதை தருவாய்???
http://blog.tamilish.com/pakkam/5
Friday, July 27, 2012
அழுகிறேன்...யாருக்கும் தெரியாமல்...
அழுகிறேன்...யாருக்கும் தெரியாமல்...
பன்னிரெண்டு மாதங்கள் காத்துக்கிடந்தேன்...
உனக்காக.....
போதும் என நிறுத்தினாய்...
போ என்று விரட்டினாய்...
நாய்க்குக் கூட மரியாதை உண்டு இவ்வுலகிலே...
அதையும் விட கேவலமாய் ஆனேன்....உன் மனதிலே....
கவலையில் அமர்ந்திருந்தேன்...ஆறுதல் சொல்லவில்லை நீ...
கண்களில் தேங்கிய நீரை துடைக்க வர வில்லை....நீ...
கோபத்தீயை அணைக்க வரவில்லை நீ
ஆனால்..கூறினாய்...உள்ளம் உடைய...ஒரு சொல்...
உயிர் வலிக்க ஒரு சொல்...
"போ" என்ற மரணச்சொல்....
இந்நொடியும் கூட அழுகிறேன்.....யாருக்கும் தெரியாமல்......
http://blog.tamilish.com/pakkam/5
Wednesday, July 11, 2012
"சீ" என்ற சிணுங்கள்
எது பகல்..எது இரவு...
எனத் தெரியாமல் கிடந்தோம்...
முத்தங்களை என் முகமெங்கும் பொழிந்தாய்..
"சீ" ....சிணுங்கினேன்..நான்..
காதலுக்கு அழைப்பிதலே.."சீ" என்ற சிணுங்கள்தானே...
என் இதழ்களில்..மதுரசம் குடித்தாய்..
தலைக்கீழாய் பூத்த தாமரைகளைப் பறித்தாய்...
இது போதும் என நான் விலக...
போதும் என்றாலே...
காதலர்கள் மொழியில் போதவில்லை என்றுதானே..அர்த்தம்..
எறும்புக்கு உணவாய்...கரும்பு தோட்டமே..வந்தது....
பிறகென்ன...
எறும்பு....கரும்பை சுவைத்தது..................
http://blog.tamilish.com/pakkam/5
Monday, July 9, 2012
பன்னிரெண்டு மணி கடிகாரமாய்....
இனியவனே......
உன்னோடு..இருந்த அந்த நாட்களை....மறக்க முயல்கிறேன்....
என்னையே நான் ஏமாற்றிக் கொள்றேனா???
அவ்வினிய நினைவுகள்...பனிமூட்டங்கள் நிறைந்த பாதையாய் ..
என் நெஞ்சில்......
வியர்வை முத்துகளை இதழ்களால்...துடைத்தாய்...
உன் நகம் பட்டு ..என் மேனியில் விழுந்த
கீரல்களை...கணக்கெடுத்தாய்...
என்னைப் பேசவிடாது...என் இதழை..
ஆட்கொண்டாய்....
உன் மார்பில் நான் தலைச்சாய்க்க....கூந்தலை
கோதி விட்டாய்.....
வரம் ஒன்று கேட்கிறேன்..தருவாயா???
பன்னிரெண்டு மணி கடிகாரமாய்....
இருவரும்....இருக்க வேண்டும்...........
http://blog.tamilish.com/pakkam/5
Monday, July 2, 2012
அது நட்பல்ல.....உலக மகாநடிப்பு....
சுய நலம்...உறவை கெடுக்கிறது....
சுய நலம் ...நட்பை. சிதைக்கிறது....
நன்றியை மறக்கும்....நட்பு....
அது நட்பல்ல.....உலக மகாநடிப்பு....
நாயும் கூட காரி உமிழும்......உன் முகத்தில்....
நன்றி கெட்ட நண்பனே என்று.....
நன்றி கெட்ட நாயே என்று உன்னை சொல்ல மாட்டேன்....
நாயோடு உன்னை ஒப்பிட்டால்.....நாயும் கூட தற்கொலைச் செய்து கொள்ளும்....
உன்னுடன் பழகிய ...அந்த கருப்பு நாட்களை மறக்க முயல்கிறேன்.....
உன்னை வெறுக்க முயல்கிறேன்.....
முடியுமா என்று தெரியவில்லை......
ஏனெனில் ..என் நட்பு உண்மையானது.......
என் உள்ளமெனும் தோட்டத்தில்....பூத்திருந்த நட்பெனும்....
அழகிய மலர்களை...வேரோடு பிடுங்கி எடுக்க
எப்படி உன்னால் முடிந்தது.....
காலனும் கூட சற்று சிந்திப்பானே......
நீ...அவனினும்....கொடியவளா......???
http://blog.tamilish.com/pakkam/5
Subscribe to:
Posts (Atom)