Friday, May 21, 2010

வாழ்க்கை


அன்பு...மனித நேயம்...
பாசம்..ஜீவராசியின் அடையாளம்..
இரக்கம்..உயிர்களின் உன்னதம்...
நட்பு...அது.. நம்பிக்கை...
காதல்... இரு மனங்களின் சேர்க்கை..
காமம்... இரு உயிர்களின் தாகம்....
குழந்தை...காதலுக்கும் காமத்திற்கும் கிடைக்கும் பரிசு...
துன்பம்....அவ்வபோது வரும் புயல்
இன்பம்..இதுவே நிரந்தரமான தென்றல்.....
இறப்பு.....மனித வாழ்க்கையின் கேள்விக்குறி???....... http://blog.tamilish.com/pakkam/5

Monday, May 17, 2010


காத்திருப்பது காதலில் சுகமா..?வலியா..?
காதலியைக் காக்க வைப்பது நியாயமா..?அநியாயமா..?
சிற்பத்தை உடைப்பது முறையோ...
ஓவியத்தை சிதைப்பது தகுமோ....
அது போல் காதலியைக் காக்க வைப்பதும் பிழையே....
இளைஞர்களே காதலுக்காக காத்திருங்கள்....காதலியைக் காக்க வைக்காதீர்கள்..... http://blog.tamilish.com/pakkam/5

Sunday, May 16, 2010

பிடிக்கும்.......


பாதித் தூக்க கனவில் தோன்றும் பள்ளிக்கூட நினைவுகள் பிடிக்கும்
எழுந்த பின்னும் போர்வைக்குள்ளே நுழைந்து கொஞ்சம் தூங்கப்பிடிக்கும்
நண்பர்கள் என்னைச் சுற்றியிருந்தால் நரகம் கூட எனக்குப் பிடிக்கும்
நாளை என்பது வந்தால் வரட்டும் இந்த நிமிஷம் எனக்குப் பிடிக்கும்
தனியாய் இருந்தால் பேச பிடிக்கும்..சபையில் இருந்தால் மௌனம் பிடிக்கும்
என...க்குப் பிடித்தது பிடிக்கும் என்ற இதயங்களெல்லாம் எனக்குப் பிடிக்கும்... http://blog.tamilish.com/pakkam/5

Wednesday, May 12, 2010

தவ‌ம்


முன்னோக்கி எனை நடத்தி முதுமை செய்யும் காலங்காள்
பின்னோக்கி எனை நடத்தி பிள்ளையாக்கக் கூடாதா....
சின்னஞ்சிறு வயதில் செய்த பிழையெல்லாம்
கண்ணீரின் வெப்பத்தில் கருகிவிட கூடாதா....
போட்டி பொறாமைகளைப் புறந்த‌ள்ளிச் சிரித்துவிட்டு
நீட்டிப் ப‌டுத்து ம‌ன‌ம் நிறைவுபெற‌க் கூடாதா???? http://blog.tamilish.com/pakkam/5

Sunday, May 9, 2010

கனவு


தந்தையின் தோளில் சாய்ந்தேன்....
தாயின் மடியில் உறங்கினேன்....
கூட்ட‌ஞ்சோறு ச‌மைத்தேன்....
நிலா சோறு உண்டேன்....
க‌வ‌லையில்லாமால் துள்ளி விளையாடினேன்...
குழ‌ந்தையாய் என் க‌ன‌வில்.... http://blog.tamilish.com/pakkam/5

Saturday, May 8, 2010

அம்மா


அம்மா.....
உலகை இயங்க வைக்கும் சொல்...அம்மா
உன்னையும் என்னையும் உலகம் அறிய செய்தது....அம்மா
கண்ணில் காணா தெய்வத்திற்குப் பால் அபிஷேகம் செய்வது போலி
உன் அம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வர செய்..அதுவே உன் சோலி.....
பத்து மாதம் உனை சும‌ந்தாளே அவளை நீ நேசி...
உனை புறந்தள்ள இடுப்பு வலி பொறுத்தாளே அவளை நீ சுவாசி....
அம்மா...ஆயிரம் அர்த்தங்களை சொல்லும் உன்னத சொல்..... http://blog.tamilish.com/pakkam/5

சிரிப்பு


<வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது...
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது...
சிறு சிறு சொர்க்கம் சிரிப்பு..ஜீவ அடையாளம் சிரிப்பு...
மரணத்தைத் தள்ளிப்போடும் மார்க்கம்தான் சிரிப்பு..
எங்கே!!!!
இரண்டு பேர் சந்தித்தால் தயவு செய்து மரணத்தை தள்ளிப் போடுங்களேன்......!! http://blog.tamilish.com/pakkam/5

மழலை


இதுவரை அச்சுக்கு வராத மொழி
யாரும் மொழிப்பெயர்த்து சொல்ல முடியாத மொழி
எனக்குத் தெரிந்த வரை மழலை மட்டும்தான்!!!! http://blog.tamilish.com/pakkam/5

Friday, May 7, 2010

கவிவர்மன்


குழல்இனிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா த‌வர்(66) http://blog.tamilish.com/pakkam/5