Thursday, March 22, 2012

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.(151)

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.(152)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.(159) http://blog.tamilish.com/pakkam/5

Wednesday, March 21, 2012

இகழ்ந்தாலும் கவிகளுக்குப் புகழாரமே...


எல்லார்க்கும் எல்லாமே பிடித்து விட்டால்....
சுவாரஸ்யம் இல்லையடா....
அன்னம் உனக்கு காகமாய் தெரிந்தால்
நான் என்செய்வேனடா...
இகழ்ந்தாலும் கவிகளுக்குப் புகழாரமே...
மட மனிதர்க்கு புரியவில்லையடா.....
புகழ்ந்தற்கு நன்றி சொல்வேன்....
கோடான கோடி நன்றியடா...
புதுக்கவிதைக்குத் தேவையில்லை இலக்கணமடா....
புதுக்கவிஞர்கள் கூறிய போது.... செவிடனாய் போனாயடா....
உரைவீச்சு.....உள்ளத்தின் குமுறலடா...
இதில் இலக்கணம் தேடுபவர்.....கிறுக்கனடா..!!!!!!! http://blog.tamilish.com/pakkam/5

Tuesday, March 20, 2012

என் சுவாசமே....



என் சுவாசமே.....என் உடல் எனும் வீணையில்...
உன் விரல்கள் இசை மீட்டாதா....
ஆனந்த பைரவியை மீட்டுவாய்..என எதிர்பார்த்த நேரத்தில்....
முகாரியை மீட்டிவிட்டாயே....
என் மனம்....அழும் ஒசை உன் காதில்...விழ வில்லையா....???
உன் காலடி ஓசையே....எனக்கு காலை அலாரம்...
உன் சிரிப்பொலியே..எனக்கு மதிய உணவு...
உன் இதழ் சிந்தும் வார்த்தைகளே....எனக்கு தாலாட்டு....
உன் வாய்மொழியே....எனக்கு அமுத மொழி....
மெய்யான நம் உறவில்...பொய் எதற்கு....
உன்னுடைய உண்மையான அன்பை ..
ஒரெ ஒரு பொய்....கலங்கம் செய்து விட்டதே.....
பொய் வேண்டாம் அன்பே.....உண்மையான நம் உன்னத உறவில்..... http://blog.tamilish.com/pakkam/5