
என் சுவாசமே.....என் உடல் எனும் வீணையில்...
உன் விரல்கள் இசை மீட்டாதா....
ஆனந்த பைரவியை மீட்டுவாய்..என எதிர்பார்த்த நேரத்தில்....
முகாரியை மீட்டிவிட்டாயே....
என் மனம்....அழும் ஒசை உன் காதில்...விழ வில்லையா....???
உன் காலடி ஓசையே....எனக்கு காலை அலாரம்...
உன் சிரிப்பொலியே..எனக்கு மதிய உணவு...
உன் இதழ் சிந்தும் வார்த்தைகளே....எனக்கு தாலாட்டு....
உன் வாய்மொழியே....எனக்கு அமுத மொழி....
மெய்யான நம் உறவில்...பொய் எதற்கு....
உன்னுடைய உண்மையான அன்பை ..
ஒரெ ஒரு பொய்....கலங்கம் செய்து விட்டதே.....
பொய் வேண்டாம் அன்பே.....உண்மையான நம் உன்னத உறவில்..... http://blog.tamilish.com/pakkam/5
No comments:
Post a Comment