Thursday, September 27, 2012

தூக்குதண்டனைதான்....உனக்கு..

பெண்களைத் தூற்றும்..கவிஞர்களே... சற்று..ஆண்களின் அவலங்களை...எழுதுங்களேன்.... சுயநலவாதிகள்....பெண் மனம் அறியா..சுயநலவாதிகள்.. ஆண்கள்!!!!!!!! தேவைக்கு சேவை செய்ய சொல்லி... செருப்பாய் நினைப்பர் பெண்களை... பெண்..நெருப்பாக மாறினால்.. என்னவாகும்..அவர் நிலைமை..... வல்லவர்கள் ஆண்கள்... நம்பிக்கை துரோகம் செய்வதில்.. சிறந்தவர்கள் ஆண்கள்... பெண் மனதைக் காயம் செய்வதில்... ஆண்களின் இயல்பே..... பெண்களின் பலவீணத்தை...பயன்படுத்திக்கொள்வதோ.... இனிப்பான பேச்சு...பொய்யான சிரிப்பு.... இதுதான்....ஆணோ.... பழம்..பாலில் விழும் வரை... நடித்திடுவர் பழத்தின்..சுவை குறைந்தவுடன்... வெறுத்திடுவர்.... பெண்கள்... கெஞ்சினால்..மிஞ்சும்...ஆண்களே.. பெண் கெஞ்சுவது... அடங்கி போய்.அல்ல... உன் அன்பில் மயங்கி போய்தான்... அன்பை..மதிக்க தெரியாத.. ஆண்களே.... அன்பெனும்..வேஷம்.போட்டு.. ஏமாற்றும்..அழகர்களே... பெண்மை...அடங்கி இருப்பது.. உன்னைக் கண்டு பயந்து..அல்ல.. உன் விஷ சொற்களை... கேட்க மனவலிமை..இல்லாமல்தான்... உன்...சொல் அம்பு...குத்தி..குத்தியே... நெஞ்சம்..குருதியில்.குளித்து விட்டது.. இன்னமும்...இடமில்லை நெஞ்சில்.. உன் அம்புகளை...ஏற்க... நிறுத்திக்கொள்.....உன் காதல் விளையாட்டை... அடக்கிக் கொள்...உன் ஆண்மையின் ஆட்டத்தை.. இறுதியாக சொல்கிறேன்.... என் காதலைப் பிணமாக்கி... அதில் நெருப்பூட்டி.... குளிர்காயும்....கொலைக்காரன்..நீ... தூக்குதண்டனைதான்....உனக்கு.. என் மனம் எனும் நீதிமன்றத்தில்................... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment