Monday, September 24, 2012

வாழ்க்கையே...யார் நீ????

வாழ்க்கையே...யார் நீ???? ஏமாற்றம் எனும் நாவலுக்கு எழுத்தாளனா...? சோகம் எனும் கவிதைக்கு கவிஞனா...? உயிர் சொட்டும் என் கனவுகள் காகித பூவாய் மாறும் காரணம் என்ன...? வாழ்க்கையே யார் நீ???? மலர்கள் கொஞ்சும் சோலையா...? சிங்கம் வாழும் குகையா....? வாசனை திரவியமா...? நாற்றம் மிகுந்த குப்பைக்கூளமா...? தெளிவும் குழப்பமும் மாறி மாறி என்னைக் கொல்கிறதே.... வாழ்க்கையே யார் நீ???? தேவர்களின் தேவதையா...? எமனின் தூதுவனா...? அழகிய ரோஜாவா...? அதிலிருக்கும் முள்ளா...? கதாநாயகனா...? வில்லனா...? வாழ்க்கையே யார் நீ???? http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment