Wednesday, July 7, 2010

ஆசை......


பௌர்ணமி இரவில் கடற்கரையோரம்....இருவரும் கைகோர்த்து நடக்க வேண்டும்.....
ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து..கதைகள் பல பேச வேண்டும்....
மெல்லிய காற்றால் உடல் கூச....உன் மார்பில் நான் புதைய வேண்டும்.....
என் கூந்தலை நீ கோதி விட்டு....நான் உறங்க நீ பாட வேண்டும்.....
இரவு நம்மை ஆட்கொள்ள நம் இதழ்கள் போரிட வேண்டும்.....
வென்றது யாரென்று உதட்டின் காயங்கள் பதிலளிக்க வேண்டும்......
யார் இந்த காதலர்கள் என நட்சத்திரங்கள்....திகைக்க வேண்டும்......
நமது மோகத் தீயை கடல் அலைகள் வந்து அணைக்க வேண்டும்....
கடலலை அணைத்தாலும் அணையாது நமது காதல்....
தீயில் போட்டு எரித்தாலும்...தீராது எந்தன் காதல்....... http://blog.tamilish.com/pakkam/5

1 comment: