Sunday, July 4, 2010

எப்போது.?????


இமைகள் ரெண்டும் மூடினால் உன் முகம் தெரிகிறதே.....
என் இதய வாசலிலும் உன் கால் தடம் இருக்கிறதே.....
நீ கொடுத்த முதல் முத்தம்...இன்னும் என் இதழ்களில் இனிக்கிறதே.....
நீ பார்த்த முதல் பார்வை என் நெஞ்சுக்குள் வாழ்கிறதே.....
என்னைத் திருடிய கள்வனே.....உன் மடி சாய்வது எப்போது..?
உன் நினைவுகள் என்னை கொல்கிறதே....
இது எனக்கு மட்டும் உண்டான வலியா......
உன் நினைவுகளில் என் நிழல் தெரிகிறதா...?????
உன்னை நினைத்து உருகுது என் ஆவி.......
உன் முகம் பார்க்க ஏங்குது என் ஜீவன்......
இனிய கனவுகள் தந்து என் உறக்கத்தைக் கெடுத்தவனே.......
என் வலிகளுக்கு மருந்தாகப்போவது எப்போது.?????
வா....என் உயிர் புகுந்து எனை உறைய செய்...
உன் அன்பால் எனைக் கரைய செய்.....
கட்டியணைத்து எனைக் கலங்க செய்.....
உன் காதலுக்காக ஏங்குகிறேன்.....இதை காமம் என்று எண்ணி விட்டதே...
காமம்.....வெறும் சுகத்தை எதிர்ப்பார்ப்பது...
எனது காதல் உன் அளவிலா அன்பை எதிர்ப்பார்ப்பது.......
அறிந்து கொள்...என் மனதை புரிந்து கொள்........ http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment