Tuesday, October 18, 2011

உன் வருகைக்காக........என் கண்ணிர்துளி.


தினம் இரவில் தவிக்கிறேன்...உறக்கமில்லாமல்...
உறங்கினால்..கனவிலாவது நீ வருவாயே...என்னை அணைக்க....
நாம் இணைந்தது...விதியின் சதியென்றாய்....
உடைந்தது என் நெஞ்சம்...தூள்..தூளாய்....
ஆசையாய் நெருங்கிய போது
அள்ளி அணைத்தாய்....மறுகணமே....தூக்கி எறிந்தாய்...
கவலைப்படுகிறேன்....நீ எறிந்ததற்காக அல்ல.....
உதறி தள்ளுவதற்காகக் கூட இனி என்னை தொட மாட்டாய் என்பதற்காக.....
மறந்து விடு என்றாய்....உனக்காக மறந்து விடுகிறேன்...
இல்லை..மறந்து விட்டதைப் போல நடிக்கப் போகிறேன்....
என் விழிகளின் ஓரம் கண்ணிர்துளி.. காத்துக்கிடக்கும்..
உன் வருகைக்காக......... http://blog.tamilish.com/pakkam/5

2 comments:

  1. இது வெறும் கவிதை அல்ல....
    கவிதையாக நீ.....!

    ReplyDelete